Friday 10 January 2014

பெங்களூரு சட்டமன்றம் - ” விதான் சவுதா “


பெங்களூரு சட்டமன்றம் - ” விதான் சவுதா “


Photo: பெங்களூரு சட்டமன்றம் - ” விதான் சவுதா “


Photo: பெங்களூரு சட்டமன்றம் - ” விதான் சவுதா “

பாபன் பாலம்


பாபன் பாலம்

Photo: ’பாம்பன் பாலம்’

மியாமி கடற்கரை


மியாமி கடற்கரை


Photo: மியாமி கடற்கரை

கூட்டணிகளும் கொள்கைகளும் ! ! !


கூட்டணிகளும் கொள்கைகளும் ! ! !

கடவுள் மறுப்பு, நால் வருண எதிர்ப்பு சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரம் போன்ற கொள்கை வழிகளின் அடிப்படையில் தோன்றி வளர்ந்தவை தான் தமிழக திராவிட கட்சிகள். பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் இந்த கொள்கை வழியில் உறுதியாக செயல்பட்டதின் காரணமாகவே தமிழகம் போற்றும் மக்கள் தலைவர்களாக இன்றளவிலும் திகழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து திராவிட கட்சிகளின் ஆளுமையின் கீழ் தமிழகம் இருந்து வருவதற்கும் இவர்களின் கொள்கைத் தாக்கமே பிரதான காரணம்.
ஆனால், இன்றைய தமிழக திராவிட கட்சிகளோ......? தங்கள் சுயநலன்களே பிரதானம் என்ற சூழலில் அந்த தலைவர்கள் உயர்த்திப் பிடித்த சுமரியாதைக் கொள்கைகளை காற்றிலே பறக்கவிட்டு விட்டு இந்துத்வா கொள்கைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க உடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டே வருகின்றன. இப்போது மதிமுக அந்தக் கடமையை சிரமேற் கொண்டுள்ளது.
ஆனால், பகுத்தறிவுப் பாரம்பரியமிக்க தமிழக மக்கள் இத்தகைய கொள்கை குளறுபடி கூட்டணிகளை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் இத்தகைய கொள்கைத்தடம் புரளும் திராவிடக் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களிடம் ஒரு சில விளக்கங்களை எதிர்பார்க்கிறார்கள்.

# நீங்கள் இது வரையிலும் உயர்த்திப் பிடித்து வந்த சுமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கைகள் என்னவாயின ?

# நால்வருண அடிப்படையிலான ‘இந்துத்வா’ கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா ?

# ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற வசதியான கொள்கை வழிக்கு வந்துவிட்ட சூழலில்......பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை அவ்வப்போது தொட்டுக் கொள்வதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். ‘திராவிட’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையும் தங்களது கட்சிகளின் பெயர்களில் இருந்து விலக்கி வையுங்கள். அந்த உன்னத சுயமரியாதை இயக்கத் தலைவர்களுக்கு நீங்கள் செய்யும் குறைந்தபட்ச நன்றிக்கடன் இதுவாகத்தான் இருக்க இயலும்.

சேது சமுத்திர திட்டம், ராமர் கோவில், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட வேறுபல பிரச்சினைகளிலும் இத்தகையதொரு புதிய கூட்டணி சூழ்நிலையில் உங்களது புதிய நிலைபாடுகள் என்னவென்று தெரிந்து கொள்ளவும் தமிழக மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில் விடை கொடுங்கள்.

புத்தாண்டு புலரட்டும்

மூன்றாவது இடத்திற்கு போனது ஏன் ?



மூன்றாவது இடத்திற்கு போனது ஏன் ?

கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மட்டுமே அன்னிய முதலீடுகளை அள்ளிக் கொண்டு வந்து விடாது. பெரிதாக கட்டுப்பாடுகளை சீனாவோ அல்லது பிரேசிலோ தளர்த்தி விடவில்லை. இருப்பினுமே முதலிரண்டு இடங்களை அவை பிடித்துள்ளனவென்றால் வேறு பல முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஆட்சிகள் மாறினாலும் மாறாமல் நிலையாக இருக்கும் தொழில் மற்றும் முதலீட்டுக் கொள்கைகள். அடுத்து, தங்குதடையற்ற மின்சாரம், மேம்படுத்தப்பட்ட சாலைகள் போன்ற அடிப்படை கட்டுமான வசதிகள். இறுதியாக, ஆனால் மிக முக்கியமாக, ஊழலற்ற நிர்வாக அமைப்பு. கட்டுப்பாடுகளும் ஊழலும் சேர்ந்தே இருப்பன. கட்டுப்பாடுகள் உண்மையிலேயே தளர்த்தப்பட வேண்டுமாயின் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

அவனும்......இவனும்...!


அவனும்......இவனும்...!


இஸ்லாமியர்களோடு இணக்கமாக இருந்த காரணத்தால் இந்துவான காந்தியையே சுட்டுக் கொன்ற இந்து மத வெறியன் நாதுராம் கோட்சே

செல்வா உள்ளிட்ட தமிழர் தலைவர்களுடன் இணக்கமாக இருந்த காரணத்தால் புத்தமதத்தவரான பண்டாரநாயாகவை சுட்டுக் கொன்ற புத்தமதத் துறவி சோமராம தேரோ.


பிரேசில் - இயேசு


Christ the Redeemer is a statue of Jesus Christ in Rio de Janeiro, Brazil


Photo: Christ the Redeemer is a statue of Jesus Christ in Rio de Janeiro, Brazil

அராஜகத்தை கண்டிப்போம் !



இந்திய பெண் தூதரக அதிகாரியும் இளந்தாயுமான தேவயானியை
அமெரிக்க போலீஸார் கைவிலங்கிட்டு தெருவில் இழுத்துச் சென்று
அவமானப் படுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம்.
-- செய்தி

அராஜகத்தை கண்டிப்போம் !


இந்தியத் தலைவ்ர்களை, உயர் அதிகாரிகளை மற்றும் இந்திய பிரபலங்களை அமெரிக்கா ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டு தான் வருகின்றது. இருந்தாலுமே கூட அமெரிக்கா செல்வதற்கும் விசா பெறுவதற்கும் கூட்டம் அலை மோதிக் கொண்டு தான் உள்ளது,( புதிய பிரதமர் வேட்பாளர் உள்பட ). அதே நேரத்தில் சோதனை என்ற பெயரில் இப்படி அவ்மானப்படுத்தும் நாடு சொர்க்கபுரியாக இருந்தாலும் தான் செல்ல விரும்பவில்லை என்று உரத்து சொன்ன அன்றைய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி போன்ற தலைவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். நாம் எப்படி இருக்க விரும்புகிறோம் என்பது அவரவர் கையில் தான். இதிலென்ன தவறு
இருக்கிறது, சோதனைகளுக்கு ஆட்படத் தானே வேண்டும் என பேஸ் புக்கிலும் டிவிட்டரிலும் எழுதும் இந்தியர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். பதிலுக்கு இப்படி கடுமையான சோதனைகளை இங்கு வரும் அமெரிக்கர்களிடம் ந்ம்மால் செய்ய இயலுமா ? போபால் விஷவாயு புகழ் அமெரிக்க ஆண்டர்சனை இன்று வரை நம்மால் ஏதுமேசெய்ய இயலவில்லை.

நிறவெறி வெள்ளயர்களை அவர்களது சொந்த தென்னாப்பிரிக்க நாட்டிலேயே தீரமுடன் எதிர் கொண்ட காந்தி பிறந்த தேசத்து மக்கள் என்ற உணர்வை நம் இந்திய மக்களிடையே மேலோங்கச் செய்வது தான் இன்றைய அவசர அவசியத் தேவை.

‘நோட்டா’



‘நோட்டா’ எனும் அபாய மணி அலறட்டும்....!


தங்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ள ‘யாருக்கும்
வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற எச்சரிக்கை மணியை
மக்கள் ஒலிக்கத் துவங்கி விட்டனர் என்பதையே ஏற்காடு
தேர்தலில் ‘நோட்டா’ பெற்ற வாக்குகள் தெளிவாக்குகின்றன.

மக்களை கிள்ளுக்கீரைகளாக கருதும் அரசியல் கட்சிகளின் அலட்சியப் போக்கு மென்மேலும் தொடரும் பட்சத்தில் ‘நோட்டா’ விரைவில் முதலிடத்தைப் பிடித்து இதர அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

’இந்த தேர்தலில் நோட்டாவிற்கு ஆதர்வாக மக்களிடம் வாக்கு சேகரித்தவர்களை காவல் துறையினர் கைது செய்திருப்பது ஜனநாயக விரோத்மானது, கண்டிக்கத்தக்கது. மற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவது அப்படி நியாயமோ அதைப் போலவே நோட்டாவிற்காக ஆதரவு திரட்டுவதும் முற்றிலும் நியாயமே.

நோட்டா முதலிடம் பிடித்தால் முடிவு என்ன என்பதை தேர்தல் ஆணையம் தெளிவாக்க வேண்டும். நோட்டா ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வாக்குகள் பெற்றாலே தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற ஏற்பாடு இருந்தால் மட்டுமே அரசியல்வாதிகளிடம் ஒரு நியாயமான அச்ச உணர்வு ஏற்படும்.

ஸ்டார்ட்.......காமெரா.......ஆக்‌ஷன்....!

Photo: ஸ்டார்ட்.......காமெரா.......ஆக்‌ஷன்....!

Cumbrian Mountain Express - Britain மனங்கவரும் மலை ரயில்

Photo: Cumbrian Mountain Express - Britain


மனங்கவரும் மலை ரயில்

அது ஒரு காதற்காலம்




அது ஒரு காதற்காலம்


அது ஒரு காதற் காலம்
பூவனமெல்லாம்
பூத்தூறலாய் புதுவசந்த்ம்
எண்ணிலா பூக்களில் தான்
எத்துணை வண்ணங்கள்
எத்துணை ஜாலங்கள்
அன்றலர்ந்த மலர்களின் 
அணிவகுப்பை காண்பதற்கு
ஆவலாய்த் திரண்டன
அலைஅலையாய் வண்டுக் கூட்டம்
வண்டுகள் மொய்க்காத மலருண்டோ
அவற்றுக்கு தேன்தர மறுத்த பூவுண்டோ
மயக்கும் மலர்களும் மொய்க்கும் வண்டுகளுமாய்
மலர்வனமெங்கும் மகிழ்ச்சிப் பெருவெள்ளம்
கானகமெங்கும் அது ஒரு காதற்காலம்

தனி வழி

தனி வழி


” நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் “ என்று சிலர் 
சொல்லலாம். 
ஆனால், அது முற்றிலும் சாத்தியமற்றது. 
சுற்றியிருக்கும் சமுதாயத்தின் பாதிப்பு இல்லாமல் 
எந்தவொரு மனிதனாலும் இருக்க இயலாது.
யார் வழியும் தனி வழியாக இருக்க வாய்ப்பேதுமில்லை.”