Wednesday 6 November 2013

" அகண்ட பாரதம் “


  1. " அகண்ட பாரதம் “


    குஜராத் அரசின் சார்பில் ‘படேலின் முழு உருவச் சிலை’ நிறுவப்படுதல் தொடர்பான முழுப்பக்க விளம்பரம் ஒன்று நேற்று (31-10-2013) தமிழ் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டிருந்தது. சங் பரிவார அமைப்புகளின் ‘அகண்ட பாரத’ கனவுடன் படேலை சம்பந்தப்படுத்தி அதில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், உண்மை வரலாறோ.....!

    அகண்ட பாரதக் கனவு கண்டவர் தேசப் பிரிவினையை ஆதரித்திருப்பதற்கு எள்ள்ளவும் வாய்ப்பில்லை. ஆனால், அன்றைய சூழலில் மவுண்ட்பேட்டன் முன்வைத்த தேசப்பிரிவினைத் திட்டத்தை ஆதரித்த முதல் காங்கிரஸ் தலைவர் ‘படேல்’ தான். காங்கிரஸூம், காந்தியும், நேருவும் படேலின் முடிவை கடுமையாக எதிர்த்தனர். ‘ஒரு பிரிவினையை ஏற்க மறுத்தால்...நாடு பல பிரிவினைகளை சந்திக்க வேண்டி வரும்’ – என அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு காந்தியும் நேருவும் பட்டேலின் கருத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். அகில் இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்ட்த்தில் நடை பெற்ற ஓட்டெடுப்பில் பட்டேலின் பிரிவினைக்கு ஆதரவான தீர்மானம் வெற்றி பெற்றது. அதையொட்டி, பிரிவினைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியப் பகுதிப் பிரதிநிதியாக படேல் பங்கேற்றார்.

    இத்தகைய ஒரு தீர்க்கதரிசனத்துடன் உறுதியாக செயல்பட்ட ‘இரும்பு மனிதரை’ அகண்ட பாரத கனவு கண்டவராக சித்தரிப்புது........வரலாற்றுத் திரிபு வாதம், கடைந்தெடுத்த அரசியல் அரசியல் அநாகரீகம்.
    IRON MAN OF INDIA....AND......NAMO

    When reports reached Patel that large groups of Sikhs were preparing to attack Muslim convoys heading for Pakistan, Patel hurried to Amritsar and met Sikh and Hindu leaders. Argued that attacking helpless people was cowardly and dishonourable,

    "Here, in this same city, the blood of Hindus, Sikhs and Muslims mingled in the bloodbath of Jallianwala Bagh. I am grieved to think that things have come to such a pass that no Muslim can go about in Amritsar and no Hindu or Sikh can even think of living in Lahore. The butchery of innocent and defenseless men, women and children does not behave brave men...”



    இரும்பு மனிதரும்....பிரதமர் கனவும்.


    ’ டெல்லி மற்றும் பஞ்சாப் போலீஸ் அமைப்புகளுக்குள் மதவெறி ஊட்டப்பட்டிருப்பதையும் அவர்களால் முஸ்லீம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க இயலாது என்பதை உணர்ந்த ‘படேல்’ இந்திய ராணுவத்தின் மதராஸ் ரெஜிமெண்ட்டை வரவழைத்தார். மதக்கலவரத்தில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க உத்திரவிட்டார்.’


    மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ‘பட்டேலை’ இந்துத்வாவை உயர்த்திப் பிடிக்கும் ‘மோடி’ போற்றி புகழ்வதின் மர்மம்...............பிரதமர் கனவு தான்.

      

No comments:

Post a Comment