Friday 10 January 2014

அது ஒரு காதற்காலம்




அது ஒரு காதற்காலம்


அது ஒரு காதற் காலம்
பூவனமெல்லாம்
பூத்தூறலாய் புதுவசந்த்ம்
எண்ணிலா பூக்களில் தான்
எத்துணை வண்ணங்கள்
எத்துணை ஜாலங்கள்
அன்றலர்ந்த மலர்களின் 
அணிவகுப்பை காண்பதற்கு
ஆவலாய்த் திரண்டன
அலைஅலையாய் வண்டுக் கூட்டம்
வண்டுகள் மொய்க்காத மலருண்டோ
அவற்றுக்கு தேன்தர மறுத்த பூவுண்டோ
மயக்கும் மலர்களும் மொய்க்கும் வண்டுகளுமாய்
மலர்வனமெங்கும் மகிழ்ச்சிப் பெருவெள்ளம்
கானகமெங்கும் அது ஒரு காதற்காலம்

No comments:

Post a Comment