அது ஒரு காதற்காலம்
அது ஒரு காதற் காலம்
பூவனமெல்லாம்
பூத்தூறலாய் புதுவசந்த்ம்
எண்ணிலா பூக்களில் தான்
எத்துணை வண்ணங்கள்
எத்துணை ஜாலங்கள்
அன்றலர்ந்த மலர்களின்
அணிவகுப்பை காண்பதற்கு
ஆவலாய்த் திரண்டன
அலைஅலையாய் வண்டுக் கூட்டம்
வண்டுகள் மொய்க்காத மலருண்டோ
அவற்றுக்கு தேன்தர மறுத்த பூவுண்டோ
மயக்கும் மலர்களும் மொய்க்கும் வண்டுகளுமாய்
மலர்வனமெங்கும் மகிழ்ச்சிப் பெருவெள்ளம்
கானகமெங்கும் அது ஒரு காதற்காலம்
No comments:
Post a Comment