Friday 10 January 2014

மூன்றாவது இடத்திற்கு போனது ஏன் ?



மூன்றாவது இடத்திற்கு போனது ஏன் ?

கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மட்டுமே அன்னிய முதலீடுகளை அள்ளிக் கொண்டு வந்து விடாது. பெரிதாக கட்டுப்பாடுகளை சீனாவோ அல்லது பிரேசிலோ தளர்த்தி விடவில்லை. இருப்பினுமே முதலிரண்டு இடங்களை அவை பிடித்துள்ளனவென்றால் வேறு பல முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஆட்சிகள் மாறினாலும் மாறாமல் நிலையாக இருக்கும் தொழில் மற்றும் முதலீட்டுக் கொள்கைகள். அடுத்து, தங்குதடையற்ற மின்சாரம், மேம்படுத்தப்பட்ட சாலைகள் போன்ற அடிப்படை கட்டுமான வசதிகள். இறுதியாக, ஆனால் மிக முக்கியமாக, ஊழலற்ற நிர்வாக அமைப்பு. கட்டுப்பாடுகளும் ஊழலும் சேர்ந்தே இருப்பன. கட்டுப்பாடுகள் உண்மையிலேயே தளர்த்தப்பட வேண்டுமாயின் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment