Monday 7 October 2013

ஆதார் அட்டை - உச்ச நீதிமன்ற வழக்கு


ஆதார் அட்டையின் சாதகமான பயன்பாடுகள் எவையென்பது ஒரு புறமிருக்க....பாதகமான விஷயம்...இதைக் காரணமாகக் காட்டி பல கோடி பயனாளிகளை ’ மானிய சமையல் எரிவாயு’ திட்டத்தில் இருந்து வெளியெற்றி விட மத்திய அரசு முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. வழக்கு நிலுவையில் இருக்கவே எரி சக்தி துறை அமைச்சர்....”மானிய சிலிண்டர் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற எங்கள் நிலை பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை”...என்று அறிவித்திருப்பது இதைத் தான் காட்டுகிறது. நாடு முழுதும் 40 சதவீதம் பேருக்குக் கூட ஆதார் அட்டை வழங்கப் படவில்லை. மீதமுள்ளவர்களுக்கு வழங்குவதற்கு எவ்வித முயற்சிகளும் எடுக்கப் படவில்லை. தமிழகத்தில் தற்சமயம் ஆதார் அட்டை வழங்குவதற்கு எந்த ஒரு ஏற்பாடும் இல்லை. ஆனால்... அடுத்த மாதத்தில் இருந்து ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு மானிய விலை சிலிண்டர் வழங்கப்படாது என்ற மிரட்டல் வேறு. ஆதார் அட்டை அவசியம் தான் ஆனால்......அதை அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டியது அதை விட அவசியம்.

No comments:

Post a Comment