Wednesday 16 October 2013

 
 
கண்ணை விற்று........


கிரீச் கிரீச்சென்று
முனகியபடியே சாலையில் சென்றது
மாபெரும் மரத்துண்டுகளை ஏற்றிய
நீண்ட நெடும் சரக்கு ஊர்தியொன்று
இரண்டு மூன்று தலைமுறைகளின்
ஒட்டு மொத்த சவ ஊர்வலமொன்று
கடந்து சென்றதாய் ஒரு நினைப்பு
சிதையுண்ட சுவற்றில் பின்னாளில்
எதை வரையப் போகின்றோம்

No comments:

Post a Comment